2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வீதியால் சென்றுகொண்டிருந்த இவர் மீது அவ்வீதியால் வந்த மோட்டார் சைக்கிளொன்று மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த இவர்  மாரவில வைத்தியசாலையில் உடனடியாக  அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையிலேயே, இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தும்மலசூரிய, வதுரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த பேதுரு எண்டனி மாகஸ் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X