2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் பெண் காயம்: விமானப்படை வீரர் கைது

Kogilavani   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் சிலாபம் வீதி, கீரியங்கள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வேளை சிலாபம் திசையிலிருந்து வந்த காரில் மோதியுள்ளார்.

இதனையடுத்து முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் காரின் சாரதியான விமானப்படை வீரர் முந்தல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X