2025 மே 14, புதன்கிழமை

தாதியர் மலசலக்கூடத்தில் கமெரா: வைத்தியருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின்  தாதியர் மலசலக்கூடத்தில் கமெராவை பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுர நீதவான் நீதிமன்ற நீதவான் ருவந்திகா மாரப்பன உத்தரவிட்டுள்ளார்.

கமெராவை பொருத்தியதாக கூறப்படும் வைத்தியரான தினுஷ சேரங்கவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலையின் தாதியரின் மலசலக்கூடத்தில் கமெரா பொருத்திய வைத்தியரை கைது செய்யுமாறு கோரி அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கமெராவில் பதியப்பட்ட தரவுகள் கொழும்புக்கு அனுப்பி அதன் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • vALLARASU.COM Tuesday, 31 December 2013 03:26 PM

    கடந்த ஆண்டில் அதிகப்படியான குற்றங்களில் ஈடுபட்டவர்கள், அரசியல்வாதிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள்,மத குருமார், பொலிஸார், இராணுவத்தினர். சாதாரண பொது மக்கள் மிகவும் குறைவு...!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X