2025 மே 14, புதன்கிழமை

கற்பிட்டி கடலில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Super User   / 2014 ஜனவரி 06 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர், எம்.என்.எம்.ஹிஜாஸ்

கற்பிட்டி கடல் எல்லையில் கடந்த வெள்ளிக்கிழமை அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த  நிலையில் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் ஜனவரி 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய செல்வி பாரதி விஜேரத்ன இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது அவர்கள் பயணித்த மீனவ படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன. பின்னர் குறித்த மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன் பின்னர் கற்பிட்டி பொலிஸாரினால் கடந்த சனிக்கிழமை மாலை புத்தளம் பதில் நீதவான் எம்.ஏ.பஸால் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, இந்த மீனவர்கள் இன்று  வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பின்னர் அவர்கள் இன்று மீண்டும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, இம்மாதம் 20ம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X