.JPG)
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காஸிம் குரைஸி மற்றும் அவரது பாரியார் ரஷ்தா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை (31) பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடாப்பொக்குணைக் கிராமத்திற்கு விஜயம் செய்தனர்.
குடாப்பொக்குணையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு பொதுக் கிணறுகளைப் பொதுமக்களிடம் கையளிப்பதற்காகவே பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அந்தப் பகுதியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகளையும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.
திருக்கோணமடு முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்திற்கும் அவர் விஜயம் மேற்கொண்டு அந்தப்பாடசாலையில் நிலவும் குறைபாடுகளையும் அவர் கேட்டறிந்து கொண்டார்.
இந்த விஜயத்தின் போது முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஏ.சி. பைஸர்கான், மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம். அஸ்மி, உட்கட்டமைப்பு திட்ட அதிகாரி எம்.எம்.எம். முனீர் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் தமிழ், முஸ்லிம் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.