2025 மே 19, திங்கட்கிழமை

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் மரணம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்,ஜுட் சமந்த

மாதம்பை, செம்புக்கட்டி பிரதேசத்தில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த அப்பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷான் தம்மிக (வயது 09) என்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்ததாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்று சனிக்கிழமை மாலை சிறுவன் விழுந்ததைக் கண்டு ஏனைய சிறுவர்கள் கூக்குரலிட்டனர். இதனைக் கேட்டு அங்கு வந்த அயலவர்கள் சிறுவனை கிணற்றிலிருந்து மீட்டதாகவும் பொலிஸார் கூறினர். 

சிலாபம் வைத்தியசாலையில் சிறுவனை அனுமதித்தபோதிலும், அவர் மரணமடைந்துவிட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை மாதம்பை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (படங்கள்: ஜுட் சமந்த)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X