2025 மே 19, திங்கட்கிழமை

புத்தளத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்காக புத்தளம் வாவியில் அதிவலு கொண்ட மின்கம்பங்கள் அமைக்கப்படவுள்ளமையைக் கண்டித்து  புத்தளம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளத்திலுள்ள 03 மீனவச் சங்கங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தன.

ஜூம்ஆ தொழுகையின் பின்னர் புத்தளம்  நகரிலுள்ள சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒன்றுகூடிய நூற்றுக்கும் மேற்பட்ட  மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலிருந்து புத்தளம் ஏரியினூடாக மின்சாரத்தை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கான மின்கம்பங்கள் புத்தளம் வாவியில் அமைக்கப்படவுள்ளதாகவும் இது    தங்களது மீனவத் தொழிலுக்குப் பெரும் பாதிப்பாக அமையும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

இத்திட்டத்திற்கு தாம் எதிர்ப்பில்லை எனவும் இருப்பினும், தங்களது  தொழிலுக்குப் பாதிப்பில்லாதவாறு வேறு வழியில் இந்த மின்கம்பங்களை அமைப்பதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகரன், யாழ். மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எல்.எம்.இல்லியாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X