2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

புத்தளம் பிரதேச செயலகத்தில் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 மே 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு  உட்பட்ட அபிவிருத்திக்கான இணைப்புக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை (12) காலை  புத்தளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, புத்தளம் நகரபிதாவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ், மாகாணசபை உறுப்பினர்களான சிந்தக அமல்  மாயாதுன்ன, என்.டி.எம்.தாஹிர், பிரதேச செயலாளர்  எம்.ஆர்.எம்.மலிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின்போது, புத்தளத்தின் அடுத்த கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 50 கோடி ரூபாவுக்கான அபிவிருத்திகள் பற்றி திட்டமிடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X