2025 மே 09, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 மே 26 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தெதுறுஓயா  ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த வென்னப்புவ, லுணுவில காலவத்தை  பிரதேசத்தைச் சேர்ந்த சாலிந்த பிரதீப் குரேரா (வயது 24) என்பவர்  நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம், மானுவன்கம அத்தனகஹகட்டுவ  பிரதேசத்திலுள்ள தனது  உறவினர் வீட்டுக்கு வந்திருந்த  குறித்த இளைஞர்,  நண்பர்களுடன் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை  மாலை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோதே  நீரில் மூழ்கியுள்ளார்.

பின்னர், இவரை தேடிக் கண்டுபிடித்த  பிரதேசவாசிகள்  உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும், அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விரிவான விசாணைகளை  சிலாபம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X