2025 மே 09, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 13 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கொஸ்வத்த, கிரிமெட்டியான பகுதியில் நீண்டகாலமாக கேரளா கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்ததாகக்  கூறப்படும் ஒருவரை  இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக  பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சந்தேக நபரின் வீட்டைச் சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்ட 03 கிலோகிராம் கேரளா கஞ்சா மற்றும் 200 சிறிய கஞ்சாப் பொதிகளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் கொஸ்வத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X