2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 17 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம், கல்லடி நெலும்வெவ பிரதேசத்தில் வசித்துவந்த நிமல் ரஞ்சித் (வயது 36) என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை இரவு  சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவர்,  காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில்  புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .