2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2014 ஜூலை 20 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


முந்தல் பொலிஸ் பிரிவுற்குட்பட்ட மதுரங்குளி - தொடுவாய் பிரதான வீதியின் பாலசோலை பிரதேசத்தில் சனிக்கிழமை(19) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடுவாயிலிருந்து மதுரங்குளி நோக்கிச் சென்ற லொறியும் மதுரங்குளியில் இருந்து தொடுவாய் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முக்குத்தொடுவாய்  பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முந்தல் பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X