2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் மனைவி மரணம்; கணவர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மாரவில, லங்சிகம பிரசேத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் மரணமடைந்ததுடன், அவரது கணவர்; காயமடைந்த நிலையில்  மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கார் ஒன்றும்; மோட்டார் சைக்கிள் ஒன்றும்  மோதி இடம்பெற்ற இந்த விபத்தில்  மாரவில, லங்சிகம பொதுஜன மாவத்தையில் வசிக்கும் எம்.எம்.எனல் பெரேரா (வயது 62) என்பவரே மரணமடைந்துள்ளார்.

தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண்ணே இந்த விபத்தில் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து  தப்பிச்சென்ற காரை உள்வீதி ஒன்றில்; இடைமறித்து சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

விபத்தில் காயமடைந்த இவர்கள் இருவரும்  உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், மனைவி மரணமடைந்துள்ளார்.  இவரது கணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X