2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Thipaan   / 2014 நவம்பர் 04 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்வாடி பிரதேசத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியும் சிலாபத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், நீர்கொழும்பு பெரியமுள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய காரின் சாரதி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் படுகாயங்களுக்குள்ளான காரின் சாரதி, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி மற்றும் அதன் நடத்துனர் மாரவில பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும்இவ்விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருதாகவும் மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X