2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2014 நவம்பர் 10 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தங்கொட்டுவை மெட்டிக் கொட்டுவ பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை(10) இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த கொச்சிக்கடை தளுவாகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில், படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உடனடியாக அங்கிருந்து தங்கொட்டுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறிச் சாரதி தங்கொட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X