2025 மே 09, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 13 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர், எம்.என்.எம்.ஹிஜாஸ்

கருவலகஸ்வெவ, புத்தி தியவர பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் மூவரை நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், புதையல் தோண்டுவதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இப்பிரதேசத்திலுள்ள கடற்படை வீரரொருவரின் வீட்டினுள் சிலர் புதையல் எடுக்கும் நோக்கில் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவ்வீட்டை முற்றுகையிட்டதாகவும் பொலிஸார் கூறினார்.

இச்சந்தேக நபர்கள் கிரிபாவ சோலைவெவ, சாலியவெவ  வீரபுர,  வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

புத்தளம் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை  இவர்கள்  ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X