2025 மே 08, வியாழக்கிழமை

சமுர்த்தி உதவி பெறும் குடும்பத்தினருக்கு கடன் முற்கொடுப்பனவு வழங்கி வைக்கும் நிகழ்வு

Thipaan   / 2014 நவம்பர் 22 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்டத்தின்  கீழ், கற்பிட்டி, நுரைச்சோலை, ஏத்தாளை  பிரதேசங்களிலுள்ள,   சமுர்த்தி உதவி பெறும் குடும்பத்தினருக்கு கடன் முற்கொடுப்பனவு வழங்கி வைக்கும் நிகழ்வு அந்தந்த பிரதேச சமுர்த்தி வங்கிகளில் வியாழக்கிழமை (20) இடம்பெற்றது.

இந்த  கடன் உதவி திட்டத்தின் கீழ் சமூர்த்தி உதவி பெறுகின்றவர்களுக்கு முற்கொடுப்பனவாக தலா 2,500 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், தோட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சர் விக்டர் அன்டனி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எச். எம்.மின்ஹாஜ் உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர். 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X