Gavitha / 2014 டிசெம்பர் 20 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வு புத்தளம் மதுரங்குளி இசுரு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ், இலங்கை சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வுக்கு புத்தளம் பிரதேச சபை தலைவர் நிமல் பமுனு ஆராய்ச்சி பூரண அனுசரணை வழங்கி இருந்தார்.
இதன் ஆரம்ப நிகழ்வில் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, வட மேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன, புத்தளம் பிரதேச சபை தலைவர் நிமல் பமுனு ஆராய்ச்சி உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
தற்கால சூழ்நிலையில், நாடு எதிர்கொள்ளும் சவால்கள் எனும் தலைப்பில் முன்னாள் நீதிமன்ற நீதவான் சீ.வீ. ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் மொஹான் சமரநாயக்க ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.
புத்தளம் மாவட்ட ஊடகவியாலாளர்கள் பலர் இந்த செயலமர்வில் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago