Princiya Dixci / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்
புத்தளம் - சிலாபம் பிரதான வீதியில் வைத்து சட்ட விரோதமாக வேன் ஒன்றில் 27 ஆடுகளை ஏற்றிச் சென்ற மூவரை, சனிக்கிழமை (07) கைதுசெய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் நகரில் வைத்து குறித்த வேனை சோதனை செய்தபோது அதில் 27 ஆடுகள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆடுகளைக் கைப்பற்றிய பொலிஸார் மூவரை கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் விசாரணையின் பின்னர் இவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago