S. Shivany / 2020 நவம்பர் 25 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பாலாவி புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, புத்தளம் அநுராதபுரம் வீதியில் அமைந்திருக்கும் அரிசி ஆலையொன்றில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, கெப் ரக வாகனத்தில் 8 மூடைகளில் 231 கிலோ உலர்ந்த மஞ்சள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி மஞ்சள் கற்பிட்டி பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டிருப்பதாக, விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026