2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

40 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது

Menaka Mookandi   / 2014 மே 11 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கற்பிட்டி பிரதேசத்தில் 40 கிலோகிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் 4 சந்தேகநபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இந்த நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் கற்பிட்டி பிரதேசத்தினை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X