2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

90 கசிப்பு போத்தல்களுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 19 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தவ்போவை பிரதேசத்திலிருந்து கருவலகஸ்வெவ பகுதி நோக்கி முச்சக்கரவண்டியில் கசிப்பு கொண்டுசென்றதாகக் கூறப்படும் தவ்போவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதுடன், 90 கசிப்பு போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாக  கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் கடமையிலிருந்த பொலிஸார் குறித்த முச்சக்கரவண்டியை இடைமறித்துச்  சோதனையிட்டபோது, அதில்  02 பிளாஸ்டிக் கான்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி கசிப்பு போத்தல்களை  கண்டுபிடித்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி கசிப்பு போத்தல்களை  முந்தல் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்வதாக சந்தேக நபர் கூறியதாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் முச்சக்கரவண்டியையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X