2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடலுக்குச் சென்ற மீனவரை படகுடன் காணவில்லை

S. Shivany   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், மீன்பிடிப் படகுடன் காணாமல் போயுள்ளாரென, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் வர்த்தக கட்டடத் தொகுதியில்  தற்காலிகமாக வசித்துவந்த மீனவரே,  இவ்வாறு காணாமல் போயுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது, சிலாபம்-காவாடியாவத்த பிரதேசத்திலிருந்து,  சிறிய ரக  மீன்பிடிப் படகொன்றில் இரண்டு மீனவர்கள்,  கடந்த 19 ஆம் திகதி கடலுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது ஆழ்கடல் பகுதியில் வைத்து மீன்பிடிப் படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்போது இதிலிருந்த காலியப்பன் ராமர் என்ற மீனவர் வேறு படகொன்றில் ஏறி கரையை வந்தடைந்துள்ளார்.

இதன் பின்னர்  கடலில் சிக்கியிருந்த மீனவரை  மீட்பதற்காக படகின் உரியைமாளரை அழைத்துக்கொண்டு, வேறு படகொன்றின் மூலம் மேற்படி மீனவர், நேற்று (20) காலை 8.30 மணியளவில் கடலுக்குச் சென்றுள்ளார்  ஆழ்கடல் பகுதி வரை சென்று  பார்த்தபோதிலும் மீனவரையும், படகையும் காணவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து,  அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், காணாமல் போன மீனவரை தேடும் பணிகள், உடப்பு- சின்னப்பாடு பகுதியிலுள்ள கடற்படையினரின்  ஒத்துழைப்புடன் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .