Editorial / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
கருவலகஸ்வெவ- மதவாச்சி காட்டுப்பகுதியில் இருந்து, துப்பாக்கி ஒன்றும் அதற்குப் பயன்படுத்தும் ரவைகள் மற்றும் 2 கிலோ கிராம் மான் இறைச்சி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் , துப்பாக்கியுடன் காட்டுக்குள் ஒருவர் செல்வதாக, பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் நேற்று (27) சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, பொலிஸாரை கண்டு சந்தேக நபர் தப்பியோடியுள்ளதுடன், துப்பாக்கி மற்றும் ஏனைய உபகரணங்களை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மானை வேட்டையாடி, அதனை இறைச்சியாக்கி காட்டுக்குள் வைத்து விற்பனை செய்திருப்பதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026