Freelancer / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான டயாலிசிஸ் பிரிவிற்குள் கிருமிகள் பரவி நோயாளர்கள் பலியாகியுள்ளமையை கருத்திற்கொண்டு அந்த பிரிவை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் சுகாதார அமைச்சு இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுமார் ஒரு வாரமாக இரத்தம் ஏற்றுவதற்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் இறக்கத் தொடங்கியுள்ளனர், இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இரத்தம் ஏற்றும் செயல்முறையின் போது இறந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரத்தம் ஏற்றுவதற்கு கொடுக்கப்பட்ட இரசாயனம் இந்த மரணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கின்றனர்.
இரத்தம் ஏற்றிய பின்பும் ரத்த அளவு குறைந்ததால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (24) குருநாகலுக்கு விஜயம் செய்யவுள்ளது. R
28 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago