2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Editorial   / 2020 மே 01 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

புத்தளம்- சேகுவந்தீவு பகுதியில் உப்பு வாய்க்கால் செய்யும் தனியார் ஒருவரின் கொட்டிலில் இருந்து கைக்குண்டொன்று ,இன்று (01) மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து ,இக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல்  வழங்கப்பட்டதையடுத்து, கைக்குண்டை மீட்டு பாதுகாப்பான ,இடத்தில் வைத்து வெடிக்கச்செய்துள்ளனர். 

குறித்த கைக்குண்டு டைப் 82 வகையைச் சேர்ந்ததென,  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .