2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

சவுதி அரசு, ஒபெக் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு அ.டொ. 225 மில். கடனுதவி

Kogilavani   / 2013 மார்ச் 08 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபிய அரசு, ஒபெக் அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இலங்கையின் வீதி வலையமைப்பை விஸ்தரிப்பு செய்வதற்காக 225 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளன.

இதில், சவுதி அரசாங்கம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 85 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடனாக வழங்கவுள்ளன. நாட்டின் வௌ;வேறு பகுதிகளை சேர்ந்த வீதிகள் இந்த நிதியுதவிகளின் மூலம்  விஸ்தரிப்பு செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இந்த கடனுதவியை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆயினும் இந்த கடனுதவிகள் தொடர்பான கால வரையறைகள், வட்டி வீதங்கள் குறித்த விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

  Comments - 0

  • happy Friday, 08 March 2013 05:28 AM

    ஹலால் -ரியால்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .