2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 27 வீதத்தால் அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 நவம்பர் 21 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 27 வீதத்தால் அதிகரித்திருந்தது. சீனா, மாலை தீவுகள், இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஒக்டோபர் மாதத்தில் மொத்தமாக 102,805 பேர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். ஒக்டோபர் வரையிலான முதல் 10 மாத காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 904,015 ஆக பதிவாகியிருந்தது.
 
இந்த ஆண்டின் இலக்கான 1.2 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வருவது என்பதை எய்துவதற்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத காலப்பகுதியில் 296,000 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை தர வேண்டியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .