2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் சுற்றுலாத்துறை 2013இல் சிறந்த நிலையில்

A.P.Mathan   / 2013 மார்ச் 19 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சுற்றுலாத்துறை 2013இன் முதல் மாதத்தில் சிறப்பாக அமைந்திருந்ததாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது. 2013 ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13.4 வீதம் வளர்ச்சியடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2013 ஜனவரி மாதத்தில் 97,411 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்திருந்ததாகவும், இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11,537 பேர் அதிகளவில் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைவாக தொடர்ச்சியாக 15ஆவது மாதமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்ட மாதமாக 2013 ஜனவரி பதிவாகியுள்ளது.

இந்த வருட இறுதியில் சுமார் 1.25 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என அரசு எதிர்வு கூறியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .