2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

“Cash Bonanza” சீட்டிழுப்பின் 12ஆவது வெற்றியாளர் தெரிவு

Niroshini   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொபிடெல் 'Cash Bonanza”' மொன்டேரோ எக்ஸ்ட்ராவெகன்ஸா  சீட்டிழுப்பின் மூலம் இதுவரை 3,500 லட்சம் ரூபா பெறுமதிமிக்க பணப்பரிசுகளை மொபிடெல் 675இ262 வாடிக்கையாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

தேசிய அலைபேசி சேவை வழங்குநரான, SLT மொபிடெல் நிறுவனத்தின் 2016 ஆண்டுக்கான, “Cash Bonanza” சீட்டிழுப்புதிட்டத்தின் மூலம், மாதாந்த மற்றும் நாளாந்த அடிப்படையில் வெற்றியாளர்களை தெரிவு செய்து ரூபாய் 3,500 பெறுமதியான அதிசொகுசு மிட்சுபிசி மொன்டேரோ ரக மோட்டார் வண்டி உட்பட இலட்சக்கணக்கான பரிசுகளை வழங்கிவருகின்றது. இம்முறை மாதாந்த சீட்டிழுப்பின் வெற்றியாளராக தெஹிவளை பிரதேசத்தினை சேர்ந்த குணரத்தினராஜா ஆரியரத்தினம் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது வரை, 3500 இலட்சத்துக்கு அதிகமான பரிசு தொகையினை கடந்த காலங்களில் அம்பலந்தோட்டை பிரதேசத்தினை சேர்ந்த, ஷானிகா ஸ்ரீமாலி, வாரியபொலவினை சேர்ந்த, ஜே.எம்.துஷாந்த ஜயலத், படல்கும்புர பிரதேசத்தினை சேர்ந்த ஆர்.எம். ரோஷான பிரியதர்ஷன மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த திருமதி. ஆர்.எம்.பீ.பி.பி. குமாரி தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த திருமதி பீ. ஏ. குசுமாவதி பதவிய ஸ்ரீ திஸ்ஸபுர பிரதேசத்தினை சேர்ந்த ஆர்.டி நிமால் ஜயசிங்க  களுத்தறை பிரதேசத்தினை சேர்ந்த திரு விஜித் ரோட்ரிகோ, எப்பாவலை பிரதேசத்தினை சேர்ந்த திரு. எச்.ஜே.எஸ் சமந்த சேனவிரத்ன மற்றும் திருகோணமலை பிரதேசத்தினை சேர்ந்த திரு. ராசநாயகம் அற்புதராஜா கண்;;;டி பிரதேசத்தினை சேர்ந்த திரு. பிரபாத் கிரிஷாந்த ரத்நாயக்க மற்றும்   வீரபொகுன பிரதேசத்தினை சேர்ந்த திரு. ஏ.எல் சத்குமார ஆகியோர் கடந்த சீட்டிழுப்பில் மொன்டேரோ ரக கார்களை வெற்றி பெற்றிருந்தனர்.

“Cash Bonanza” திட்டத்தின் வெற்றியாளர்கள் தொடர்பான விபரங்கள்,மொபிடெல் வாடிக்கையாளர்சேவை இலக்கமான 071-2755777 மற்றும் தபால் மூலமாக மட்டுமே வெற்றியாளர்களுக்கு அறியத்தரப்படும். இதன் போது, வாடிக்கையாளர்கள் வெற்றியீட்டிய பரிசுகளுக்காக எவ்விதமான மேலதிகக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X