2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

13 நிதி நிறுவனங்கள் இன்னமும் பட்டியலிடப்படவில்லை

A.P.Mathan   / 2013 மார்ச் 11 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதிவு செய்யப்பட்ட 47 நிதி நிறுவனங்களில் இன்னமும் 13 நிதி நிறுவனங்கள் தம்மை கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடவில்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

குறித்த கம்பனிகளின் நிதிசார் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான கால எல்லையை தாம் நீடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஆயினும் அறிவிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் தம்மை பட்டியலிடுவதற்கு தவறிய நிறுவனங்களுக்கெதிராக நடவடிக்கையெடுக்கவும் தாம் தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்தியவங்கி அறிவித்துள்ளது.

ஏசியன் ஃபினான்ஸ் லிமிடெட், சிட்டி ஃபினான்ஸ் கோர்ப்பரேஷன், தேஷோதய டிவலப்மன்ட் ஃபினான்ஸ் லிமிடெட், ஈடிஐ ஃபினான்ஸ் லிமிடெட், ஐடியல் ஃபினான்ஸ் லிமிடெட், கன்ரிச் ஃபினான்ஸ் லிமிடெட், மெல்ஸ்டா ரீகல் ஃபினான்ஸ் லிமிடெட், எம்சிஎஸ்எல் ஃபினான்சியல் சேர்விசஸ் லிமிடெட், பிரைம் கிராமீன் மைக்குரோ ஃபினான்ஸ் லிமிடெட், றிச்சர்ட் பீரிஸ் ஆர்பிகோ ஃபினான்ஸ் லிமிடெட், த ஸ்டான்டர்ட் கிரெடிட் ஃபினான்ஸ் லிமிடெட், டிகேஎஸ் ஃபினான்ஸ் லிமிடெட் மற்றும் யு.பி ஃபினான்ஸ் லிமிடெட் போன்றன இவ்வாறு பட்டியலிடப்படாத நிதிசார் நிறுவனங்களாகும்.

எதிர்வரும் மூன்று ஆண்டு காலப்பகுதிகளுக்கு மத்திய வங்கியின் மூலம் நிதிசார் நிறுவனங்களுக்குரிய செயற்பாட்டு சான்று அநாவசியமாக வழங்கப்படமாட்டாதென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அண்மையில் அறிவித்திருந்தமை குறி்ப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .