2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

13 புதிய சாதனை படைத்த றிட்ஸ்பரி சேர்.ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் றிட்ஸ்பரி வர்த்தக நாமத்தின் அனுசரணையுடன் அண்மையில் ஹோமாகம தியகம விளையாட்டரங்கில் 44ஆவது சேர்.ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியை இலங்கை பாடசாலை மெய்வல்லுநர் சங்கம் (SLSAA) ஏற்பாடு செய்திருந்தது. இப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை நீர்கொழும்பு ஆவே மரியா கன்னியர் மடம் மற்றும் ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை நடப்பு சம்பியனான நீர்கொழும்பு மரிஸ் ஸ்டெலா கல்லூரியும் வென்றன.

இப் பரிசளிப்பு நிகழ்வானது சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரும், குழும பணிப்பாளருமான நந்தன விக்ரமகேவின் ஆதரவின் கீழ் நடைபெற்றது. 74 புள்ளிகளுடன் நீர்கொழும்பு மரிஸ் ஸ்டெலா கல்லூரி நடப்பு சம்பியன் பட்டத்தையும், வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 71 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், கொச்சிக்கடை லொயொலா கல்லூரி 57 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றன.

இதற்கிடையே பெண்கள் பிரிவில், ஆவே மரியா கன்னியர் மடம் 98 புள்ளிகளுடன் சம்பியன் பட்டத்தை பெற்றதுடன், குருநாகல் மலியதேவ பெண்கள் பாடசாலை மற்றும் நீர்கொழும்பு நியுஸ்டீட் பாடசாலை ஆகியன முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றன.

'இலங்கையின் விளையாட்டு நாட்காட்டியில் மிக முக்கிய நிகழ்வான இப் போட்டிக்கு அனுசரணை வழங்கியதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இப்போட்டிகளில் பல புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டதுடன், பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் வெற்றிக் கிண்ணங்களையும் வென்றெடுத்தனர்.

44ஆவது சேர்.ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளுக்கு வழங்கிய அனுசரணை மூலம் பல மாணவர்களிற்கு தங்கள் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.

றிட்ஸ்பரியானது நாடுமுழுவதும் உள்ள திறமைகளுக்கு ஆதரவு வழங்கி வருவதுடன், இலங்கை பாடசாலை மெய்வல்லுநர் சங்கம் மற்றும் நாட்டின் ஏனைய விளையாட்டு கழகங்களுடனான தனது பங்காண்மையை தொடர எண்ணியுள்ளது' என  சிபிஎல் ஃபூட்ஸ் இன்டர்நெஷனல்(பிரைவட்) லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுபுல் டி சில்வா தெரிவித்தார்.

நான்கு நாட்கள் தீவிரமாக நடைபெற்ற போட்டிகளின் இறுதியில், கம்பளை ரத்னாவளி பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த சசீமா ராஜபக்ஷ மற்றும் லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த வருண அத்தனாயக்க ஆகியோருக்கு அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருது வழங்கப்பட்டது.

றிட்ஸ்பரி வர்த்தகநாமமானது தொடர்ச்சியாக இலங்கையின் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆதரவு வழங்கி வருவதுடன், தேசிய கனிஷ்ட ஸ்கொஷ் சம்பியன் தொடர், சர்வதேச பாடசாலைகளுக்கு இடையேயான உள்ளக கால்பந்தாட்ட போட்டிகள், உள்ளக சர்வதேச பாடசாலை மற்றும் வணிக மெய்வல்லுநர் போட்டிகள் போன்றவற்றிற்கு நிரந்தர அனுசரணையை வழங்கி வருகிறது.

மேலும் றிட்ஸ்பரி வர்த்தகநாமத்தின் மூலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள சேர்.ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .