2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வங்கி வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைய வாய்ப்பு: பங்கு முகவர்

A.P.Mathan   / 2013 ஜனவரி 09 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் காலங்களில் வங்கிகளின் மூலம் வழங்கப்படும் வட்டி வீதங்களில் வீழ்ச்சியேற்பட்டு உறுதியடையக்கூடிய நிலை காணப்படுவதாகவும், இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மூலதனச் சந்தையில் அதிகளவு ஈடுபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் என கெப்பிட்டல் எலையன்ஸ் செக்கியுரிட்டீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரின்லால் அத்துருபஹான தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொழும்பு பங்குச்சந்தையில் அதிகளவு கொடுக்கல் வாங்கல்களில் ஆர்வம் காட்டுகின்றனர். பெருமளவான உளநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது வங்கிகளில் நிலவும் அதிகளவான வட்டி வீதங்களின் மூலம் ஈர்க்கப்பட்டு, தமது முதலீடுகளை வங்கிகளில் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக பங்குகளில் முதலீடு செய்வதை விட, வங்கிகளில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் அதிகளவு வருமானத்தை திரட்டிக் கொள்ள முடியும் என அவர்கள் கருதுகின்றனர்.

ஆயினும் இலங்கை மத்திய வங்கி கடந்த மாதம் முதல் தனது நாணயக் கொள்கைகளில் தளர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கொழும்பு பங்குச்சந்தை முன்னேற்றம் கண்டுள்ளது. எதிர்காலத்தில் இந்நிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .