2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

கொழும்பு பங்குச்சந்தை மீள உயர்வுப்பாதையில்

A.P.Mathan   / 2013 மார்ச் 07 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவு ஈடுபாடு மற்றும் ஆர்வம் காரணமாக கடந்த சில தினங்களாக சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் மீண்டும் புத்துயிர் பெற்றிருந்தமையை நேற்றைய தினம் அவதானிக்க முடிந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் பிரதான விலைச்சுட்டெண்ணான அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 37 புள்ளிகள் அதிகரித்து நிறைவடைந்திருந்தது.

சிலோன் டுபாக்கோ, கார்கில்ஸ் மற்றும் செலின்சிங் போன்ற நிறுவனங்களின் பங்குகள் பிரதான பங்களிப்பாளர்களாக திகழ்ந்திருந்ததாக சொஃப்ட்லொஜிக் பங்குமுகவர் நிறுவனம் அறிவித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .