2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இரத்மலானையில் தனது நான்காவது மருத்துவமனையை நிறுவ ஹேமாஸ் திட்டம்

A.P.Mathan   / 2013 மார்ச் 20 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹேமாஸ் மருத்துவமனையின் மூன்றாவது வைத்தியசாலை தலவத்துகொட பகுதியில் அமையவுள்ள நிலையில், அதன் நான்காவது வைத்தியசாலையை இரத்மலானை பகுதியை அண்மித்து நிறுவுவதற்காக 250 மில்லியன் ரூபா செலவில் காணியொன்றை நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதாக ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் தலைவர் முர்தஸா யூசுஃவ்அலி தெரிவித்திருந்தார்.

நேற்றைய தினம்(19) ஹேமாஸ் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும்போது இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தலவத்துகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்றாவது ஹேமாஸ் வைத்தியசாலை எதிர்வரும் மே மாதம் முற்பகுதியில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக நாம் 1.4 பில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளோம். மொத்தமாக எமது மூன்று வைத்தியசாலைகளுக்காகவும் நாம் இதுவரையில் 4 பில்லியன் ரூபாவை இதுவரையில் முதலீடு செய்துள்ளோம். எமது நோக்கம் 2020ஆம் ஆண்டளவில் எமது வைத்தியசாலைகளில் மொத்தமாக 600 படுக்கைகளை கொண்டிருப்பதாக அமைந்துள்ளது.

தலவத்துகொட சந்தியில் அமைந்துள்ள இந்த ஹேமாஸ் வைத்தியசாலையின் மூன்றாவது மருத்துவமனை மொத்தம் 62000 சதுர அடி பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பகுதி மக்களுக்கு அனைத்துவிதமான சுகாதார வசதிகளையும், மருத்துவ வசதிகளையும் வழங்கும் வகையில் தனது சேவைகளை வழங்கவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .