2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பங்குச்சந்தை சுட்டிகள் மீண்டும் உயர்வு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தை நேர்பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. புரள்வு பெறுமதி 1.1 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. ஜோர்ஜ் ஸ்ருவர்ட் ஃபினான்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தது. யூனியன் வங்கி, வட்டவளை பிளான்டேஷன்ஸ், சிட்ரஸ் லெய்ஷர் மற்றும் லங்கா வோல்டைல்ஸ் போன்ற பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகளவு காணப்பட்டது. புரள்வு பெறுமதியின் 45 வீதத்தை வெளிநாட்டு கொள்வனவு பதிவு செய்திருந்தது.

வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஜோர்ஜ் ஸ்ருவர்ட் ஃபினான்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் ஆகியவற்றின் பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 0.42 வீத உயர்வை பதிவு செய்திருந்தது. ஜோர்ஜ் ஸ்ருவர்ட் ஃபினான்ஸ் பங்கொன்றின் விலை 23.20 ரூபாவால் (76.57%) அதிகரித்து 53.50 ரூபாவாக பதிவாகியிருந்தது. திவஸ ஈக்குவிட்டி மூலம் 11,427,200 ஜோர்ஜ் ஸ்ருவர்ட் ஃபினான்ஸ் பங்குகள் ஜோர்ஜ் ஸ்ருவர்ட் ஃபினான்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. கொமர்ஷல் வங்கி பங்கொன்றின் விலை 1.20 ரூபாவால் (0.95%) அதிகரித்து 128.80 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 174,428 பங்குகளால் அதிகரித்திருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமையற்ற பங்கொன்றின் விலை 0.60 ரூபாவால் (0.48%) அதிகரித்து 125.60 ரூபாவாக பதிவாகியிருந்தது.

பன்முகத்துறை என்பது, சந்தையின் புரள்வு பெறுமதியில் இரண்டாவது அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 1.07 வீதத்தால் குறைந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 1.00 ரூபாவால் (0.42%) குறைந்து 238.90 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 1,128,105 பங்குகளால் அதிகரித்திருந்தது.

இதேவேளை குட்ஹோப், செலின்சிங், ஷலிமர் மற்றும் இந்தோ மலே ஆகிய நிறுவனங்கள் தமது இறுதி பங்கிலாபங்களை பங்கொன்றுக்கு முறையே 9.77 ரூபா, 11.43 ரூபா, 11.38 ரூபா மற்றும் 14.30 ரூபா வீதம் அறிவித்திருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X