.jpg)
கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்குகள் மீது விலை உயர்வுகள் பதிவாகியிருந்தமை காரணமாக நேற்றைய தினம் பங்குச்சந்தை உயர்வடைந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது மொத்த பங்கு கைமாறல்கள் இடம்பெற்றிருந்தன. சென்ரல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் சொஃப்ட்லொஜிக் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. இதேவேளை, வெளிநாட்டவர்கள் தொடர்ந்து பங்கு கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர். கொமர்ஷல் வங்கி, டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி மற்றும் ஜோன் கீல்ஸ் வொரன்ட்கள் மீது விற்பனை பதிவாகியிருந்தது.
பன்முகத்துறை என்பது புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் வொரன்ட்கள் 22 மற்றும் 23 பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 0.39 வீதம் உயர்வடைந்திருந்;தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 1.10 ரூபாவால் (0.46%) உயர்ந்து 238.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 1,126,193 பங்குகளால் அதிகரித்திருந்தது. வொரன்ட்கள் 22 மற்றும் 23 பங்கொன்றின் விலை முறையே 6.30 (9.55% மற்றும் 8.77%) அதிகரித்து 72.30 மற்றும் 78.10 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 108,918 மற்றும் 281,039 பங்குகளால் குறைந்திருந்தது.
வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதித் துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் இரண்டாவது உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. இந்த துறை 0.89 வீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. கொமர்ஷல் வங்கி பங்கொன்றின் விலை 0.60 ரூபா (0.42%) அதிகரித்து 142.10 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 188,850 பங்குகளால் குறைந்திருந்தது.
டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா பங்குகளும் புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்தது. டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா பங்கொன்றின் விலை 0.20 ரூபாவால் குறைந்து 20.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 67,728 பங்குகளால் குறைந்திருந்தது.