2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பங்குச்சந்தை, தங்கம் விலை மற்றும் நாணயமாற்று வீத நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 நவம்பர் 16 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
கொழும்பு பங்குச்சந்தை கடந்த 43 மாதங்களில் பதிவாகிய உயர்ந்த பெறுமதியை கடந்த வாரம் பதிவு செய்திருந்தது. வங்கிகள் மற்றும் நிர்மாணத்துறைசார்ந்த பங்குகளின் மீது முதலீட்டாளர்கள் அதிகளவு ஆர்வத்தை செலுத்தியிருந்தனர். இதற்கு முன்னர் கொழும்பு பங்குச்சந்தை 2011 ஏப்ரல் 18 ஆம் திகதி 7547.9 எனும் புள்ளிகளை பதிவு செய்திருந்தது. நடப்பு நிதியாண்டின் முதலாம் அரையாண்டுக்கான கணக்கறிக்கைகள் வெளியாகிய வண்ணமுள்ளமை, குறிந்த நிறுவனங்களின் மீதான பங்குகளில் உயர்ந்த ஈடுபாட்டை பதிவு செய்ய ஏதுவாக அமைந்திருந்தது. மேலும், வஙகி வட்டி வீதங்கள் குறைந்தளவில் காணப்படுகின்றமையும் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில் நாட்டம் அதிகளவில் காணப்படுவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. கடந்த வாரம் எயிட்கன் ஸ்பென்ஸ் ஹோல்டிங்ஸ், நெஸ்லே லங்கா மற்றும் DFCC வங்கி போன்ற முன்னணி நிறுவனங்கள் தமது அரையாண்டு அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7,501.09 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 4155.82 ஆகவும் பதிவாகியிருந்தன. 
 
நவம்பர் 10ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 12,682,154,440 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 75,170 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 72,024 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 3,146 ஆகவும் பதிவாகியிருந்தன. 
 
திங்கட்கிழமை
DFCC வங்கி, ஃபின்லேஸ் கொலம்போ மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகியவற்றின் மீது விலைச்சரிவுகள் காரணமாக சுட்டிகள் மறை பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 1.8 பில்லியனை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், லங்கா ஐஓசி, பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சொஃப்ட்லொஜிக் கெப்பிட்டல் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ரேணுகா ஃபுட்ஸ், களனி டயர்ஸ் மற்றும் வலிபெல் பவர் எரத்னா ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடுகள் சுவிஸ்டெக், லங்கா ஐஓசி மற்றும் ஓவர்சீஸ் ரியல்ட்டி ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.
 
செவ்வாய்க்கிழமை
கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், ஓவர்சீஸ் ரியால்டி மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகியவற்றின் மீதான நேர் பெறுமதி காரணமாக அபவிசு நேர் பெறுமதியை பதிவு செய்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், பீபள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. லங்கா ஐஓசி, சுவிஸ்டெக் மற்றும் டோக்கியோ சீமெந்து ஆகியவற்றின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாட்டை பதிவு செய்திருந்தனர். இதேவேளை கலப்பு ஈடுபாடு என்பது டெஸ் அக்ரோ, ரேணுகா பூட்ஸ் மற்றும் ரேணுகா அக்ரி பூட்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் தொடர்ந்து ஜோன் கீல்ஸ் பங்குகள் கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.
 
புதன்கிழமை
அக்சஸ் என்ஜினியரிங், பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய பங்குகளின் மீது உயர் விலை பதிவு காரணமாக சுட்டிகள் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், டயலொக் ஆக்சியாடா, கீல்ஸ் ஹோட்டல்ஸ் மற்றும் சிட்டிசன் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்கள் ரேணுகா அக்ரி பூட்ஸ், ஏசியா அசெட் ஃபினான்ஸ் மற்றும் தப்ரோபேன் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது தமது ஈடுபாட்டை பதிவு செய்திருந்தனர். இதேவேளை, கலப்பு ஈடுபாடு என்பது சன்ஷைன் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா ஐஓசி பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகள் கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.
 
வியாழக்கிழமை
அபவிசு 7500 புள்ளிகளை கடந்திருந்தது. (2011ஆம் ஆண்டை தொடர்ந்து), புரள்வு பெறுமதி 4.0 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு செலான் வங்கி, சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, டயலொக் ஆக்சியாடா மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அடம் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் பிசிஎச் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. இதேவேளை கலப்பு ஈடுபாடு என்பது பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், டோக்கியோ சீமெந்து மற்றும் டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது.  வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.
 
வெள்ளிக்கிழமை
லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி, வலிபல் வன் மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றின் மீதான விலை உயர்வுகள் காரணமாக சுட்டிகள் நேர் பெறுமதியை பதிவு செய்திருந்தது. புரள்வு பெறுமதி 2.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. உயர் தேறிய பெறுமதிய வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ், ஏசிஎல் கேபிள்ஸ், டிஸ்டிலரீஸ், டோக்கியோ சீமெந்து, சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ், யூனியன் வங்கி மற்றும் செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சியெர்ரா கேபிள்ஸ், என்ட்ரஸ்ட் செக்கியுரிட்டீஸ் மற்றும் பிசிஎச் ஹோல்டிங்ஸ் போன்றவற்றின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. இதேவேளை அக்சஸ் என்ஜினியரிங், டோக்கியோ சீமெந்து வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் எம்ரிடி வோல்கர்ஸ் ஆகியவற்றின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அக்சஸ் என்ஜினியரிங் பங்குகளை கொள்வனவு செய்வதில் அதிகளவு ஆர்வம் செலுத்தியிருந்தனர்.  
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஒரியன்ட் காமன்ட்ஸ், எம்ரிடி வோல்கர்ஸ், ரேணுகா அக்ரி, மெட்.ரெஸ்.ஹொலி மற்றும் என்ட்ரஸ்ட் செக். போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
ரேணுகா ஹோல்டிங்ஸ் (சாதாரண), ட்ரேட் ஃபினான்ஸ், உடபுசல்லாவ, எஸ் எம் பி லீசிங்(சாதாரண) மற்றும் டெஸ் அக்ரோ (சாதாரண) போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



 
தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 43,500 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 40,900 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.40 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 208.30 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X