2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 20 பேரையும் 22 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற  குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி (22-07-2014) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில்  வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் நேற்று வெள்ளிக்கிழமை(8) உத்தரவிட்டார்.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை குறித்த 20 இந்திய மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்கள் 20 பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி  வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X