2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி நேற்று  வியாழக்கிழமை 27ஆவது தடவையாகத் தோண்டப்பட்டபோது, சிதைவடைந்த நிலையில் மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர் மேற்படி  மனித புதைகுழியை  தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.  இந்த நிலையில், நேற்றையதினத்துடனான  மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆகும். 

இதேவேளை, ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட 09 மனித எலும்புக்கூடுகளை நேற்று வியாழக்கிழமை  மீட்டு அவற்றை பொதி செய்து மன்னார் நீதவானின் உத்தரவுக்கமைய மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுவரையில், 60 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் இவ்வாறு மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் நீதவானின் உத்தரவுக்கமைய மன்னார் பொது வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளன.

இன்று  வெள்ளிக்கிழமையும் 28ஆவது தடவையாக மன்னார் நீதவான் முன்னிலையில் மேற்படி மனித புதைகுழி தோண்டப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .