2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் 14,984 ஏக்கர் நெற்செய்கை அழிவு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2013 இறுதி மற்றும் 2014 ஆரம்ப காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையில் 14,984.7 ஏக்கர் நெற்செய்கை பருவமழை சீரின்மையினால் அழிவடைந்திருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விவசாய (விரிவாக்க) பிரதிப் பணிப்பாளர் எஸ்;.செல்வராசா இன்று (06) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2013 இறுதி மற்றும் 2014 ஆரம்ப காலப்பகுதியில் பாரிய, சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழும், மானாவாரி நிலப்பரப்புக்களிலும் 59,000 ஏக்கர் வரையில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பருவகால மழையினை நம்பி மேற்கொள்ளப்பட்ட இந்த நெற்செய்கையானது, போதிய மழையின்மை காரணமாக நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளன.

இதில் பாரிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழுள்ள 3530 ஏக்கர்களும், சிறிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழுள்ள 815.5 ஏக்கர்களும், மானாவாரி செய்கையில் செய்கை பண்ணப்பட்ட 10639.20 ஏக்கர்களும் இவ்வாறு அழிவடைந்துள்ளதாக செல்வராசா மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .