2025 ஜூலை 23, புதன்கிழமை

திருகேதீஸ்வரத்தில் 16 தடவைகளில் 53 எலும்பு கூடுகள் மீட்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 28 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து 16 தடவைகளில் 53 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை தோண்டப்பட்ட போது மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இந்த எலும்புக்கூடுகளுடன் எலும்பு கூடுகளின்  எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண தலைமையிலான குழுவினர் இணைந்தே குறித்த எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர்.
இதே வேளை   திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி உள்ள இடத்திற்கு வருகை தந்த குற்ற புலனாய்வுப்பிரிவினர் (சி.ஐ.டி) 4 ஆவது  நாளாகவும் இன்று   தமது விசாரனைகளை அங்கு முன்னெடுத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி குறித்த மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது.

மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பான இடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை வரை 16 பெட்டிகளில் 18 எலும்;புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனித புதைக்குழி புதன் கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .