2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 20 பேர் தலைமன்னாரில் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 22 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 20 பேரை இன்று செவ்வாய்க்கிழமை( 22) அதிகாலை கைதுசெய்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்தார்.

5 படகுகளில் வந்த இந்த மீனவர்களை கைதுசெய்த  கடற்படையினர்,  அவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டுசென்றுள்ளனர்.

இந்த நிலையில் விசாரணைகளின் பின்னர்  இந்த மீனவர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

இந்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X