2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட 28 எலும்புக்கூடுகள் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 31 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட  எலும்புக்கூடுகளில் 05 எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார்  மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று வெள்ளிக்கிழமையும் எடுத்துச்செல்லப்பட்டது.

மன்னார் நீதவானின் உத்தரவுக்கு அமைய  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டதொரு  இடத்தில் இதுவரையில் 28  மனித எலும்புக்கூடுகள் வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி புதைகுழியிலிருந்து  55 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அநுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையில் 19 தடவையாக இன்று வெள்ளிக்கிழமையும் மனித புதைகுழி தோண்டப்பட்டது. இதன்போது  எவ்வித மனித எலும்புக்கூடுகளும் மீட்கப்படவில்லை.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மேற்படி புதைகுழி தோண்டப்படவுள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி குறித்த பகுதியில்  குடிநீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் கிடங்கு தோண்டியபோது அதில் மனித எச்சங்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .