2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மேலும் 3 மனித எலும்புக் கூடுகள் மீட்பு

Super User   / 2014 பெப்ரவரி 10 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி கடந்த 10 தினங்களின் பின் இன்று திங்கட்கிழமை மீணடும் தோண்டப்பட்ட போது குறித்த புதைகுழியிலிருந்து மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 31ஆம் திகதி குறித்த அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன.

இதன்போது மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் தொகை 58ஆக அதிகரித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எரும்புக் கூடுகளில் 28 எலும்புக் கூடுகள் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று மீட்கப்பட்ட மூன்று மனித எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதுவரை 31 எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை செவ்வாய்க்கிழமை குறித்த அகழ்வுப்பணிகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .