2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

5kg கஞ்சாவுடன் ஒருவர் கைது

George   / 2016 மே 16 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், இலுப்பைக்கடவை பகுதியில் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப் பொதிகளுடன் நின்றிருந்த சந்தேகநபரொருவரை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு  கைது செய்ததாக மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, மேற்கொள்ளாப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் 5 கிலோ 450 கிராம் எடை கொண்டவை எனவும் அவற்றின் பெறுமதி, 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதெனவும் பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X