2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'அனைவரையும் ஒன்றிணைத்து பிரஜைகள் குழு உருவாக்கப்பட வேண்டும்'

George   / 2016 மே 11 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

'மாவட்டத்தில் உள்ள சகல மக்களின் பிரதிநிதித்துவத்துடன் பிரஜைகள் குழு உருவாக்கப்பட்டு அது பதிவு செய்யப்படும் போதுதான் சிறப்பானதாக இருக்கும்' என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் எட்டு மாவட்டங்களுக்கான இணைப்பாளர் அ. சகாயம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் சனிக்கிழமை புதிதாக பிரஜைகள் குழு உருவாக்கப்படுவது தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

'கடந்த 35 வருடங்களாக மன்னார் மாவட்டத்தின் பிரஜைகள்குழு அரசியல் கலப்பு இன்றி செயற்பட்டு வருகின்றது. இந் நிலையில், வவுனியாவில் பிரஜைகள்குழு உருவாக்கப்படவுள்ளதாக அறிந்தேன்.

அது அனைவரது பங்களிப்போடும் ஒத்துழைப்போடும் பதிவு செய்யப்படுமானால் சிறப்பானதாக இருக்கும். 
ஏற்கெனவே பிரஜைகள்குழு, வவுனியாவில் இயங்கி வருகின்றபோதிலும் அது அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து செயற்படுவதாக எமக்கு தெரியவில்லை. அத்துடன், பதிவு செய்யப்பட்டவும் இல்லை.

ஆகவே, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யவுள்ளதுடன் இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X