Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் கிராமத்தில் கடந்த 64 ஆண்டுகளாக நிரந்தர வீதி அமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குண்டும் குழியுமான செம்மண் புழுதி நிறைந்த வீதி வழியாகவே தாம் பயணிக்க வேண்டி இருப்பதன் காரணமாக, வன்னேரிக்குளத்துக்கு நிரந்தர வீதியினை அமைத்துத் தருமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“1953ஆம் ஆண்டு வன்னேரிக்குளம் கிராமம் உருவாக்கப்பட்டது. இக்கிராமத்தில் தற்போது ஐந்நூறு வரையான குடும்பங்கள் வாழ்கின்ற போதிலும் இக்கிராமத்துக்கு நிரந்தர வீதி உருவாக்கப்படவில்லை.
30 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கிளிநொச்சி நகரத்துக்கு செல்ல, சேதமடைந்த வீதி வழியாகவே பயணிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, வன்னேரிக்குளம் கிராமத்துக்கும் அக்கராயன் கிராமத்துக்கும் இடையிலான 10 கிலோமீற்றர் வீதி, கடுமையாக சேதமடைந்து உள்ளது” என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago