2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த், எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் ஆணொருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை - இந்தியாவுக்கான எல்லைப் பகுதியில் 'தீடை' என அழைக்கப்படும் மண் திட்டில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளதையடுத்து தலைமன்னார் கடற்படையினருடன் இணைந்து, பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் இந்திய மீனவருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. சடலத்தின் கை பகுதியில் 'எச்.றுபினா' என பச்சை குத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இருந்து கடந்த மாதம் 28ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற 04 தமிழக மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் இச்சடலம் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையில் சடலம் ஒப்படைத்துள்ளதுடன், வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X