2025 ஜூன் 30, திங்கட்கிழமை

21 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 மே 11 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து, மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 இந்திய மீனவர்களையும்   எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, இன்று (புதன் கிழமை) உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பினுள் கடந்த மாதம் 27ஆம் திகதி  3 படகுகளில் அத்து மீறி நுழைந்து, மீன் பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்து செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர், குறித்த மீனவர்களை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
குறித்த மீனவர்களில் வயது குறைந்த சிறுவர் தொழிலாளி ஒருவரும் அடங்குகின்றார். இந்த நிலையில்,

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா கைது செய்யப்பட்ட  21 மீனவர்களில் 20 பேரை இன்று 11 ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடடதோடு, வயது குறைந்த சிறுவர் தொழிலாளியை இன்று(11) வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், குறித்த இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரனை மீண்டும் இன்று மீண்டும்  விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த 21மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, குறித்த மீனவர்களில்

20 பேரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், வயது குறைந்த சிறுவனை எதிர்வரும் 25ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X